அமீரகம், மே 28-
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் செயல்பட்டு வரும் ஆரா அகாடமியா கல்வி நிறுவனம், NEET, JEE மற்றும் CBSE பாடத்திட்டங்களில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவை நடத்தியது. இந்த விழா, மே 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஷார்ஜா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் என 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நினைவுச்சின்னங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவை Dr. ஐஸ்வர்யா ஆனந்த், சூரஜ், வர்ஷா சூரஜ் ஆகியோர் தலைமையில் நடத்தியது. நிகழ்ச்சியை UTS தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் ஒருங்கிணைத்தார். தொகுப்பாளராக மக்கள் ஆர்ஜே சாரா கலந்து கொண்டார். விழாவில் முக்கிய விருந்தினர்களாக ஷார்ஜாவின் மேதகு முஹம்மது பின் அப்துல்லா அல் மர்சூகி, கல்ப் பல்கலைக்கழக பேராசிரியர் மண்டா வெங்கட்ரமணா, Curtin University பேராசிரியர் Dr. சித்திரைi பொன் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல் மார்க் பெற்றவர் அஸ்வின் மனோஜ், இரண்டாம் மார்க் பெற்றவர்கள் பூஜலக்ஷ்மி, பாத்திமா, சாரா ரத்தா ஆகியோர். பத்தாம் வகுப்பில் மகேஷின் முதலிடம் பிடித்தார். தமிழக குரல் ஊடக சேவையை பாராட்டி அதற்கும் விருது வழங்கப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அனைவருக்கும் சிறப்பு விருந்தும் வழங்கப்பட்டது. இந்த விழா மாணவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment