துபாய், டிச.30:
தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள அன்னபூர்ணா உணவக நிகழ்ச்சி அரங்கில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சி, தேமுதிக அமீரக பிரிவு சார்பில் செயலாளர் கமால் கே.வி.எல் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் வாகை சதீஷ்குமார், துணைச் செயலாளர்கள் சாகுல் அமீத், அம்சத்தலி, செல்வம், சேகர், கார்த்திக், தமிழ் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜெகன் ராஜ், சமூக வலைதள செயலாளர் தங்க வடிவேலு, துணைச் செயலாளர் கேப்டன் சிவா, நைனா முஹம்மத், பெரம்பலூர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கள்ளக்குறிச்சி சின்னா, தினகுரல் மற்றும் வணக்கம் பாரதம் வளைகுடா முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, ஆர் மீடியா புகழ் ரஷீத், சமூக ஆர்வலர் பச்ச மண் பாசறை நாசர், டிக் டாக் புகழ் ஹமீது, இன்ஷா புகழ் செல்வா பானு உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். “தமிழக அரசியலில் கேப்டன் போன்ற மனிதநேய தலைவர் இனி வரப்போவதில்லை” என்றும், “எளிய மக்களின் நலனுக்காக வாழ்ந்த நல்ல மனிதர் நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்” என்றும் பலர் உருக்கமாக தெரிவித்தனர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் சிறப்பு பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சி நிறைவில், தேமுதிக அமீரக பிரிவு செயலாளர், நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment