துபாய், அக்டோபர் 19, 2025
அதனை தொடர்ந்து, ஜனாப் N. M. E. தாஹிர் அலி அவர்கள் வரவேற்புரை ஆற்றியதுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தலைவர் ஜனாப் K. M. நூருல் ஹக், செயலாளர் ஜனாப் P. K. அப்துல் நாசர் ஆகியோர் அமைப்பின் ஆண்டு செயல்பாடுகளை விளக்கினர். மேலும், ஜனாப் P. A. ரஃபீக் முஹம்மது மற்றும் தணிக்கையாளர் ஜனாப் S. M. H. பாவா முஹையதீன் வரவு-செலவுக் கணக்குகளை சமர்ப்பித்தனர்.
கூட்டத்தில், கூத்தாநல்லூர் இளைய தலைமுறைக்கான கல்வி உதவிகள், திருமண மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. தொழிலாளர் நிலையிலிருந்து தொழில்முனைவோராக மாறும் வழிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஜனாப் N. M. B. முஹம்மது சாதிக் அவர்கள் பேசியது குறிப்பிடத்தக்கது.
பின்னர், புதிய நிர்வாக குழு தேர்வு நடைபெற்றது. அதில் ஜனாப் M. A. ஜமால் முஹம்மது அவர்கள் தலைவராகவும், ஜனாப் S. M. H. பாவா முஹையதீன் செயலாளராகவும், ஜனாப் S. M. பெனாசிர் அஹமது பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாக உறுப்பினர்கள் உற்சாகத்துடன் பொறுப்பேற்றனர். தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் ஜனாப் D. P. K. அஹமது அலி மற்றும் S. A. ஜபருல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நன்றியுரை மற்றும் இரவு விருந்துடன் இனிதே நிறைவடைந்தது.
No comments:
Post a Comment