துபாயில் ராகம் சைவ உணவகத்தின் மூன்றாம் கிளை திறப்பு – நடிகை ரெஜினா கசன்றா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 April 2025

துபாயில் ராகம் சைவ உணவகத்தின் மூன்றாம் கிளை திறப்பு – நடிகை ரெஜினா கசன்றா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.


துபாய், ஏப்.25-

ஐக்கிய அரபு அமீரக துபாயில் ஊத் மேத்தா பகுதியில் செயல்படும் ராகம் சைவ உணவகம், வாடிக்கையாளர்களின் பெரும் ஆதரவுடன் தனது மூன்றாவது கிளையை அல் கிசஸ் பகுதியில் திறந்தது.


இந்த புதிய கிளையை தென்னிந்திய பிரபல நடிகை ரெஜினா கசன்றா, உணவகத்தின் நிறுவனர் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் சிறப்பாக திறந்து வைத்தார். நிகழ்வில் தமிழக குரல் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் வளைகுடா முதன்மை நெறியாளர் Kamalkvl, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் வளைகுடா முதன்மை நிருபர் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைத்தனர்.


இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களை ராகம் உணவகத்தின் நிறுவர்கள் மஹாதிர் முஹம்மது, முஹம்மது கமாலுதீன், அம்ஜத் பாஷா அன்வர் ஆகியோர் மலர்க்கொத்து வழங்கி, பொன்னாடை போர்த்தி மரியாதையுடன் வரவேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad