நேற்று மாலை துபாயிலுள்ள, அபுபக்கர் அல் சித்திக் என்ற இடத்தில் அன்னபூர்ணா உணவு விடுதியில், 'எம்ஜிஆர் கதை' மற்றும் அதன் ஆங்கில வடிவம் MGR - Man of Humanity ஆகிய நூல்களை Ithayakani S.Vijayan வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக யாசின் இமான் கலாசார சேவை, பால் பிரபாகர் தலைவர், துபாய் தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் கூட்டமைப்பு), நகரத்தாரின் துபாய் நாகப்பன், துபாய் தமிழ் சங்கத்தின் ஷீல. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் புத்தக வெளியிடு சுழற்சி முறையில் மீண்டும் வெளியிடப்பட்டது.
அந்த புத்தகத்தை முத்தமிழ் சங்கம் இவன்ட் தலைவர் ஷா அவர்களும் ,சர்புதீன் அவர்களும், கேப்டன் தொலைக்காட்சி புதுவை ஸ்டார் தொலைக்காட்சி தமிழக குரல் செய்தி இணையதள வளைகுடா நெறியாளர் கமால், கிரீன் குளோபல் ஜாஸ்மின். தினக்குரல் ஆசிரியர் நஜும், பாளையங்கோட்டை ரமேஷ் மற்றும் ஏராளமாக பெற்றுக் கொண்டனர், மேலும் அவர்கள் பங்கேற்று வாழ்த்தி எம்ஜிஆரின் சிறப்புகளைப்பற்றி பேசினர்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் சிறந்த முறையில் ஊடகவியலாளர், 'மின்னல் பரிதி' மின்னிதழ் பொறுப்பாசிரியர் திரு. கடற்கரை பாண்டியன் மற்றும் அவரது குழுவினர் செய்திருந்தினர். நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- TAMILAGAKURAL KAMALKVL
No comments:
Post a Comment